Tuesday, March 26, 2019

புதிய பார்வை...

🍁புதிய பார்வை🍁

தன்
சிறிய
வயது
மகனை
அழைத்து
கொண்டு...

ஒரு
மலை
உச்சிக்கு
சென்றார்
ஒரு
தந்தை...

அப்போது
செல்லும்
வழியில்,
தவறி
விழுந்த
சிறுவன்...

' அம்மா '
என்று
அலறினான்...

அந்த
வார்த்தை
அப்படியே,
மலையில்
எதிரொலித்தது...

குதுகலமடைந்த
சிறுவன்...

' அப்பா '
என்றும்,
'அம்மா'
என்றும்...

மேலும்
சில
வார்த்தைகளை
சொல்லியும்...

எதிரொலிகளை
கேட்டு
மகிழ்ந்தான்...

திடீரென
'நீ
ஒரு
முட்டாள் '
என்றான்...

மலையும்
அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

கடுப்பாகி
போன
சிறுவனை
பார்த்து
தந்தை,

"நான்
ஒரு
அறிவாளி,"
என்று
கத்த
சொன்னார்...

சிறுவனும்
அதே
போல்
கத்தினான்...

மலையும்
அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

தந்தை
மகனை
பார்த்து...

"இதுதான்
வாழ்க்கை.
நம்
எண்ணங்கள்
செயல்கள்
அனைத்தும்,
நம்முடையதை
போலவே
பிரதிபலிக்கும்
தன்மை
கொண்டது...

நல்லவைகளுக்கு
நல்லவையாகவும்,
தீயனவைக்கு
தீயதாகவும்,
அமைவது
இப்படியே,"
என்று
கூறினார்...

'எண்ணம்
போல்
வாழ்வு'
என்பது
இது தானே...

வாங்க,
நாமும்...

நேர்மறை
சிந்தனைகளை,
விதைக்க
தொடங்குவோம்...

எதிர்மறை
எண்ணங்களை
குறைக்க
தொடங்குவோம்...

நம்
வாழ்க்கை,
மகிழ்ச்சிகரமாக
அமைவதையும்,
கண்டு
மகிழ்வோம்...

அன்புடன்
காலை
வணக்கம்...
🙏🙏🙏🙏💐💐💐

No comments: