Saturday, June 17, 2017

ஒரு ஆசிரியன் கனவு... ஒரு நிமிட கதை

"ஒரு சின்ன கற்பனை..

அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பெறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கலாம் என்னவா பெறக்க விரும்புவிங்க

வரிசையா சொல்லுங்க பாப்போம்"

மிஸ் ... நான் வந்து ரோஸ்...

"வாவ்... ஆனா ... ஏன்"

அப்போ தான் வாசனையா இருப்பேன்

"ஓ... குட்
அடுத்து"

மிஸ்... நான்.. மயில்...

"ஹா..  ஹா.. ஏன்..."

அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல
எனக்கும் புடிக்கும்... அதனால

"செம...
அடுத்து"

மிஸ்... நான்...பட்டாம்பூச்சி
ஏன்..னா? அதுக்கு றெக்க இருக்கும்...

"செம... செம...
அடுத்து"

மிஸ்... நான்.. மான்
ஏன்..னா?
அது துள்ளி துள்ளி ஓடும்

மிஸ்... நான்.. ட்ரீ
ஏன்..னா?
அதுல தான் நெறைய பறவ வந்து தங்கும்

"ஹே.. வாவ்..
அடுத்து"

மிஸ்... நா ... பாரதி
பெரிய மீச வச்சிப்பேன்

"ஹா... ஹா..
அடுத்து"

மிஸ்... நான்... முயல்
ஏன்..னா? அது உங்களுக்கு பிடிக்கும்ல

"ம்...
அடுத்து"

எங்களையே கேட்டுட்டிருக்கீங்க
இப்போ நீங்க சொல்லுங்க...

"நானா...?"

"நான் வந்து ஒரு சாக்பீஸா பெறக்கனும்"

அறைமுழுக்க   பெரு சிரிப்பு

ஏன்... மிஸ்

"ஏன்...னா?
வெறும் கரும்பலக எதும் கத்து தராதே"

"நீ  கத்துக்க தன்னையே இழக்குறது
சாக்பீஸ் தான"

"ஒரு எழுத்து கத்துக்கொடுத்தாலும் போதும்
அதுக்காக தேயிர வாழ்க்க எவ்வளவு அழகு தெரியுமா...? "

மெலிதாய் புன்னகைத்தேன்..

அறை முழுக்க பிரமிப்பின் கண்விரிப்போடு கை தட்டல்...

அவசர அவசரமா விரலோடு உயர்ந்தது ஒரு குரல்

அப்போ நா... குட்டி சாக்பீஸ்... என்று

வெடித்த சத்தத்தோடு பின் எழுந்தது பல குரல்களில்

நாங்களும் குட்டி சாக்பீஸ்...
நாங்களும் குட்டி சாக்பீஸ்...

கத்தல் தாங்காது காதடைக்க முனைகையில் எதேச்சையாய்
கையிலிருந்து  விழுந்து குட்டியானது
ஒரு முழு நீள சாக்பீஸ்...

நன்றி....ஆசிரியருக்கு....

5 comments:

வைசாலி செல்வம் said...

அருமையான வரிகள்..

vimalanperali said...

கத்துக்கொடுக்கும் சாக்பீஸாக இருப்பதில் வாழ்த்துக்கள்!

vimalanperali said...

கத்துக்கொடுக்கும் சாக்பீஸாக இருப்பதில் வாழ்த்துக்கள்!

louisglady said...

சிறப்பு

K. ASOKAN said...

அருமையான குட்டிக் கதையில் அற்புத விளக்கம் பாராட்டுகள்