Friday, February 03, 2017

இருமுனையும் கூர் தீட்டிய கத்தி....

சமூக வலைதளங்களின் கொடூர சக்தியினை அறிந்தும்  அறியாத, தோழிகளின் பார்வைக்கே இந்த பதிவு..!!
.
பெண்களை பொறுத்த வரையில் இருமுனையும் கூர் தீட்டப்பட்ட கத்தி தான் இந்த சமூக வலைதளங்களாகிய #பேஸ்புக்'கும், #வாட்ஸப்'பும்..!!
.
அந்த கத்தியினை மிகவும் பொறுமையுடனும், கவனத்துடனும், ஒவ்வொரு நொடியும் ஆழ்ந்த யோசனையுடன் கையாள வேண்டும்..!!
.
சற்று கவனம் சிதறினாலும் அந்த #கத்தி பெண்களாகிய உங்களை எளிதில் பதம் பார்த்து விடும், என்பதற்கு ஒரு தகுந்த எடுத்துக்கட்டே இந்த பதிவு..!!
.
இந்த சமூக ஊடகங்களில் எக்கரணத்தை கொண்டும் உங்களுக்கு தெரியதா, பரிட்ச்சயமாகத நபர்களுடனான நட்பினை தவிருங்கள்.. உங்கள் தோழியின், சகோதர, சகோதரிகளின் அல்லது நண்பனின் நண்பராக இருந்தாலும் கூட..!!
.
அதேபோல உங்களுடைய போட்டோக்களையும்,  முக்கிய தனிப்பட்ட தகவல்களையும், ஆன்-லைன் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும், பாஸ்வோர்ட்'களையும் யாரிடமும் பகிரதீர்கள் உங்கள் நண்பருக்கும் கூட.. ஏனெனில் உங்கள் நண்பரின் அலைபேசி எப்போதும் அவர் கையிலேயே வைத்திருக்கப்போவதில்லை..!!
.
அப்படியே உங்களுடைய மேற்கூறிய தகவல்களை நம்பகமானவர்களுக்கு பகிர்ந்தாலும் வேலை முடிந்த  பின் சிரமம் பார்க்காமல் அதை அழித்து விட அவர்களுக்கு நினைவூட்டுங்கள்..!!

இல்லையேல் அவரின் அலைபேசி தவறினாலோ, அல்லது அவரின் கைபேசி பழுது ஆனாலோ, உங்களுடைய முழு தகவலும் முகம் தெரியாத நபரிடம் எளிதாக சேர்ந்து விடும்..!!
.
அதன் விபரீதத்தை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் பல உதாரணங்களை நீங்களே நன்கு அறிந்திருப்பீர்கள்..!!
.
பெற்றோர்களை பிரிந்து வெளிஇடத்தில் வேலை பார்க்கும் தோழிகளுக்கு, இந்த கைபேசியானது உங்களை உங்கள் பெற்றோர்களுடனும், நம்பகமான நண்பர்களுடனும் தொடர்பு கொள்வதற்க்கு மட்டுமே..!!
.
அதை அறியாமல் பரிட்சயமாகதவர்களுடன் உங்களை பற்றிய தகவலை பகிர்வதக்கு அல்ல என்பதை மனதிற்கொள்ளுங்கள்..!!
.
முகம் தெரியாத நபர்களையும், தேவையற்ற அரட்டைகளையும் தவிர்ப்பதே பெண்களாகிய உங்களுக்கு பாதுகாப்பு.. வருமுன் காப்பதே சிறந்தது என்பதையும் மனதிற்கொள்ளுங்கள்..!!
.
பல நாட்களாக இந்த பதிவையிட நான் எண்ணியிருந்தேன், இன்று இந்த #மாலைமலர் #செய்தி'யை படித்தவுடன் சட்டென ஒரு உதரணதுடன் கூடிய விழிப்புணர்வு பதிவாகிவிட்டது..!!
.
#சிந்திப்பீர்_செயல்படுவீர்..!!
.
இதை நீங்களும் உங்கள் நட்பு வட்டத்தில் தெரியபடுத்தலாமே..!!
.
#மனிதம்_காப்போம்..!! #பெண்ணியம்_காப்போம்..!! #நன்றி..!! 🙏�💐

No comments: