Monday, February 28, 2022

ஒழுக்கம் வாழ்வின் ஏற்றம்....



*●அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்.●●*

📌 *மகனுக்கு வீட்டில்* *இருக்கவே*
*பிடிக்கவில்லை....!*

📌 *பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,..!*

📌 *ஆளில்லாத ரூமில்* *டி.வி. ஓடுகிறது பார்,* *அதை அணை,...!*

📌 *பேனாவை*

📌 *ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்....!*

📌 *இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை....!*

📌 *நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது...."!*

📌 *இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது... !*


📌 *வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்...."*

📌 *அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான்...!*

📌 *நேர்காணலுக்கு கிளம்பினான்......!*

📌 *கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா....!*

📌 *நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்....!*

📌 *கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது....!*

📌 *அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்....!*

📌 *நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன....!*

📌 *தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை* *அணைப்பதற்க்காக*
*குழாயை அப்படியே* *போட்டுவிட்டுப் போயிருந்தான்....!*

📌 *தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது... !*

📌 *குழாயை கையில்*
*எடுத்தவன் செடியின்* *அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்....!*

📌 *வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்...!*

📌 *மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.....!*

📌 *நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது...!*

📌 *விளக்கை அணைக்காமல் செல்கிறாயே...?”*

📌 *என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்....!*

📌 *மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்....!*

📌 *கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே*
*திகைப்பு. “நமக்கு இங்கு வேலை*
*கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது....!*

📌 *பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.....!*

📌 *அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.....!*

📌 *அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன....!*

📌 *”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது...?”*

📌 *என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்....!*

📌 *இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்....!*

📌 *இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை....!*

📌 *கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்... !*

📌 *சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே...!*

📌 *“நீங்கள் எப்போது வேலைக்கு*
*சேருகிறீர்கள்?” என்று கேட்டார்......!*

📌 *“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா,* *இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்....!*

📌 *”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை....!*

📌 *கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.....!*

📌 *அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்....!*

📌 *இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை....!*

📌 *நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்....!*

📌 *அதனால் நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்....!*

📌 *அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்....!*

📌 *அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது....!*

📌 *அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது....!*

📌 *வேலைக்கு* *செல்லும் இடத்திற்கு*
*அப்பாவையும்* *அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்....!*

📌  *அப்பா நமக்காக* *எது செய்தாலும்*
*சொன்னாலும் ஒரு* *சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!*

📌 *உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,*
*வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன....!*

📌 *நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால்,* *தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,*
*கட்டுப்படுத்துவதால் தான்,...!*

📌 *நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே....!*

📌 *தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்...."*

*" ஆனால் தந்தை அப்படி அல்ல "*

*தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமர வைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்....!*

📌 *ஒரு சொல் கவிதை அம்மா !*

📌 *அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா !!*

📌 *தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்...!*

📌 *தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்...!*

📌 *நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும்,* *இருபது வயதில் வில்லனாகவும்,* *தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்...!*

📌 *தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்....!*

*அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்...!*


📌 *எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை*.
               
நன்றி..
பகிர்வு பதிவு....

No comments: