Friday, September 12, 2014

புகை யெனும் பகை.



smoke_texture2803

புகை யெனும் பகை.

ன்னும் கொஞ்ச நேரம் இழுத்தால் 
தான் என்ன! இழு!
புகை பகையென்று பலர் ஓதுகிறார்
புகை வகையாக ஊதுகிறார்.
புகையெனும் கொடிய வேது பிடிப்பதால்
திகைத்திட வருவான் யமசிதுரன்.
உள்ளுறுப்பில் நிக்கோட்டின் படிவு ஆபத்து
கருத்தரிப்பு வாய்ப்பும் நழுவுமே!….. (இன்னும் கொஞ்சநேரம் )
னித இறப்புத் தோற்றுவாய் பல
கணிப்பில் முக்கிய இடத்துக்
காரணியாக இரண்டாம் இடம் புகையிலைக்கு.
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்
வைகாசி 31. புற்று நோயிற்கு 
புகையால் 80விகித வாய்ப்பு.
வதம் செய்கிறான் மனிதன் தன்னை
சுதம் அணைக்கிறான் வீணே…..(இன்னும் கொஞ்சநேரம் )
தமாய்க் கூடும் இருமல் புகைக்கு
மிதமாய் நடுங்கும் தேகம்-
இதயநோய் இறுக அணைத்துத் தழுவும்
இரைப்பால் உடல் மெலியும்
மகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்
தகா உறவு புகைப்பகை.
சகாவல்ல புகை! சகுனி! விலக்கு!

மிக்க  அன்புடன் 
சிவா...

No comments: