Tuesday, February 07, 2023

வாழ்க்கை மந்திரம்

*நம் மனதை நிமிர்த்தும் மந்திர சொற்கள்..!!*         
        
          
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  

அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி  வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். 

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல..

5.பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

6.சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் 
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.கஷ்டம் தான்,ஆனா முடியும்...

10.நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

11.இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

14.உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப்  பார்...

15.இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே..

19.முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

20.கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21.அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

22.விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

24.சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.ஆகா, இவனும் அயோக்கியன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

26.உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், 
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

*வீழ்வது கேவலமல்ல,* 
*வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்..* 
*முயற்சியுடன் எழுந்திடுங்கள்..!!* 

*உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.*

*வெற்றி நமதே!*
நன்றி
படித்ததில் பிடித்தது...
பகிர்வு பதிவு