Monday, June 14, 2021

பள்ளிக்கல்வி ஆணையரின் பாராட்டு சான்றிதழ்....

அனைவருக்கும் வணக்கம்...கொரோனா பெருதொற்று காலத்தில் ( முதல் அலையின் போது ) ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்வித்துறை ஆணையரின் அறிவுருத்தலின் படி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் பொருட்டு குழு உருவாக்கபட்டு அக்குழுவின் பரிந்துறையை ஏற்று  தேவையான பாடம் ( அவசியமான ) கரு பொருளை மட்டும் கற்றல் கற்பித்தில் செய்ய  பள்ளிக்கல்வி துறை பரிந்துரை செய்துள்ளது.இப்பணியில் நான் கணிதம் பாடங்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த ஆணையர் அவர்களுக்க நன்றி!..

 மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழல் உள்ளதால் அவர்களின் கற்றல் இழப்பை தடுக்க பாட இணைப்பு ( Bridge course ) மற்றும் பாட பணித்தாள் ( Work Book )  புத்தகம் தயாரிக்கும் பணியில்  ( கணிதம் ) இணையம் மூலமாக பங்கேற்று என் பணியை சிறப்பாக பணியாற்றியதை  நமது பள்ளி கல்வித்துறை ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இவண்
என்றும் கல்விப்பணியில்
சேலம்.ஆ.சிவா..