Tuesday, June 11, 2019

புதிய பார்வை...

🍁🍁புதிய பார்வை🍁🍁

தனி தன்மை என்பது நம் அனைவருக்கும் உண்டு...

அதை கண்டு, உணர்ந்து, வெற்றியாய் மாற்றி கொள்வதில் நம் சிறப்பு அடங்கியுள்ளது...

தனி தன்மை என்பது, இவர்களை வேறுபட்டவர்களாக காட்டுபவை மட்டும் அல்ல...

விரும்ப தக்கவர்களாக காட்டுவது...

இவர்கள் தன் வாழ்க்கை முழுவதும், புதிது புதிதாக, எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்...

இவர்கள் அதை பற்றி அதிகம் பேசுவது இல்லை...

ஆனால் இவரை சுற்றி இருப்பவர்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள்...

சிலர் தாமாகவே வந்து உதவுவார்கள்...

அந்த உதவியின் தாக்கமும்,அது ஏற்படுத்தும் நன்றி உணர்வும் அளவிட முடியாததாக இருக்கும்...

இவர்கள் எப்போதும் மதிக்க படுவார்கள்...

இவர்கள் இருக்கும் இடம், எப்போதும் கலகலப்பாக இருக்கும்...

இவர்கள் உற்சாகமான உரையாடல் தரும் உந்து சக்திக்காகவே, இவர்களை சுற்றி இருப்பார்கள்...

இவர்கள் செய்யும் செயல்கள் எப்போதும் நேர்த்தியாகவே இருக்கும்.

நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் செய்வதில்லை...

இவர்கள் செய்வதே நேர்த்தியாகத்தான் இருக்கும்...

தமது தோல்விகளை,
அவமானங்களை பற்றி சற்றும் இவர்கள் கவலை படுவதே இல்லை...

மாறாக அவைகளையே உரமாக்கி வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற, தெரிந்து வைத்திருப்பார்கள்...

எந்த நேரத்திலும் காலத்திலும் இவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்...

வாங்க...

நமக்கும்
தனி தன்மைகள்
உண்டு...

அதனை தரமாய் மாற்றி வெற்றிகளை குவிக்க முயற்சிகள் செய்வோம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: