Sunday, October 08, 2017

மாற்றம்...கவிதை

மாற்றம்.....

மாற்றம் எங்கும் எதிலும்
குகைகள் மரங்கள் மாளிகையாய்
இலை தலைகள் உடைகளாய்
அங்கம் காட்டும் ஜன்னலாய்..
நாகரீகம் என்ற மந்திரம்
மாற்றி போட்டது மனிதனை..
கூட்டுக் குடும்பம் குலைந்து
தனித் தீவில் தவிக்கிறோம்..

மாற்றம் என்று எண்ணி
சொந்த காசில் சூனியம்...
ஆண்மகன் பெண்டிர் பணியிலே
பெண்டிர் ஆண்மகன் பணியில்
மாற்றம் பதியம் போட்டது
மரபின் மாற்றத்தை மனதில்...

வேலை என்ற பெயரில்  காசுக்காக  நாகரீக பிச்சை...
நலம் மறந்து நாசமானோம்
காபாற்ற யாருமில்லா அனாதையாய்/....
ஓடினோம் வாழ்வின் எல்லைக்கு
முகவரி தேடி...தேடி...
கண்டோம் முகவரியை கல்லறையில்.../

நட்புடன்....

ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்

No comments: