Saturday, December 17, 2016

மகா கவி பாரதி(தீ)

மகா கவி பாரதி(தீ)

தமிழ்த் தாயின்
செல்லப் பிள்ளை
புரட்சி என்ற
அணு
புதைந்த கவி...

தமிழையும்
தமிழகத்தையும்
தலை நிமிர
வைத்த கவி...

பாட்டுக்கொரு புலவன்
எளியோரையும்
வழியோரையும்
தன் தோல்
சுமந்து மகிழ்ந்தவன்...

ஆங்கிலேயர்க்கு
பாட்டால்
பாடம்
புகட்டிய மாமேதை...

இவன் பாடல்கள்
அனைத்தும்
தமிழ் தாயின்
உடலில் அணியும்
மின்னும் அணிகளன்கள்...

பெண்ணினத்தின்
மறுபக்கத்தை
உலகரிய செய்த
மகா கவி பாரதி...

பெண் விடுதலை
என்ற விதைக்கு
உயிர் கொடுத்த
சூரியன்...

பாரதியின் திறனை
கண்டுஅஞ்சிய
காலன்
அவனை இளமையிலேயே
பறித்து கொண்டானோ...?

பாரதி(தீ)
நீ
மீண்டும்
பிறப்பாய்
என
நம்பி
காத்திருக்கிறோம்....
உன்
வரவை நோக்கி...

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿😫🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

No comments: